‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கிக்கு ஏற்பட்ட மன வருத்தம் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ஷிவாங்கி தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட, அவருக்கு ஏதோவொரு மன கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்ற பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழத்துவங்கி இருக்கிறது.
குக் வித் கோமாளி ஷிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சூப்பர் சிங்கர்’ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி. இந்த சீசனில் பாட்டு பாடுவதை தவிர்த்து, துறுதுறு பேச்சாலும், அப்பாவித் தனத்தாலும் இவர் மக்களை ரசிக்க வைத்திருந்தார். இந்த சீசன் முடிந்ததற்கு பிறகு விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்ட ஷிவாங்கிக்கு எதிர்பாராத அளவுக்கு ஃபேன் ஃபேஸ் உருவானது. இவருக்காகவே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பலரும் ரசித்து பார்க்க ஆரம்பித்தார்கள்.
இந்தியாவில் ஜூன் 30க்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
அந்த வகையில் இந்த ஷோ மூலம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரையிலும் எக்கச்சக்கமான வாழ்த்துகளும், பாராட்டுக்களும் இவருக்கு கிடைத்து வந்தது. தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 மற்றும் 3 என அனைத்திலும் கலந்து கொண்டு வரும் ஷிவாங்கி, தற்போது சினிமாவிலும் நடித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் டான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ள ஷிவாங்கி, நடிகர் வடிவேலுவுடன் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்.
இடையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3யிலும் கலந்து கொண்டு வரும் இவர் புகழுடன் சேர்ந்து மீண்டுமாக மக்களை மகிழ்விக்க துவங்கி இருக்கிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவாங்கி இப்போது ஒரு முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட அது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – ஜாக்பாட் அறிவிப்பு!
அதாவது, ஷிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘உங்களது தனிமைக்கு துணையாக மது அருந்துபவர்களை தேடாதீர்கள். நீங்கள் தாகமாக இருக்கிறீர்கள் என்று விஷத்தை குடிக்க முடியாதல்லவா’ என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கூட, நீங்கள் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். ஏனென்றால் அவர்கள் உங்களை பயன்படுத்தி விட்டு காகிதம் போல தூக்கி போட்டு விடுவார்கள் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஷிவாங்கி ஏதேனும் ஒரு பிரச்சனையை கடந்து வந்திருப்பாரோ என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.