இந்தியாவில் ஜூன் 30க்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
இந்தியாவில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரிய கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதை வரும் ஜூன் 30ம் தேதியுடன் நிறுத்த வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை:
இந்தியாவில் மக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக நாம் வெளி இடங்களுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வது வழக்கம்.இந்த பிளாஸ்டிக் பொருட்களை மற்றும் பைகளை நாம் ஒரு முறை பயன்படுத்து விட்டு அதை தூக்கி எரியும் அவை மண்ணில் புதைகிறது. இந்த பிளாஸ்டிக் எளிதில் மட்கும் தன்மை அற்றவை என்பதால் மண்ணுக்கு தீங்கு விளைவிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாடு நம்முடைய புவி சூழலை அழிக்கும் முக்கிய பொருளாக உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – ஜாக்பாட் அறிவிப்பு!
இவ்வாறு நாம் சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் உட்கொள்வதால் அவைகள் இறக்கவும் நேரிடைகிறது. நில வாழ் உயிரிகள் மட்டுமில்லாமல் பிளாஸ்டிக் தற்போது கடலுக்கும் சென்று கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரிய கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை ஜூன் 30ம் தேதிக்கு பிறகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு, 144 தடை உத்தரவு அமல் – அரசு அனுமதி!
அந்த வகையில் பிளாஸ்டிக் குச்சிகள், தட்டுகள் மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், கோப்பைகள், கண்ணாடிகள், முட் கரண்டிகள் கத்திகள் அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஜூன் 30ம் தேதிக்கு பிறகு உற்பத்தி மற்றும் நுகர்வை நிறுத்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.