விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்களின் கேள்விக்கு கொந்தளிப்பு!
விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக அறிமுகமான ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளிவந்தது. இது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு ரக்ஷிதா பதில் அளித்துள்ளார்.
ரக்ஷிதா பதில்:
விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மற்ற தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பினாலும் மக்கள் மனதை கவரும் வகையில் விஜய் டிவி சீரியல்கள் மட்டுமே உள்ளது. அதில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், இந்த சீரியலில் ஹீரோவாக மிர்ச்சி செந்தில், ஹீரோயினாக நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி நடித்து வருகிறார். அவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக அறிமுகம் ஆனவர்.
“ரோஜா” சீரியல் கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – நிஜமாவே அழுதாராம்!
தமிழ் சீரியல்களில் கலக்கி வரும் இவருக்கு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் ‘ரங்கநாயக’ என்ற கன்னட படத்தில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தான் நடிக்கும் கன்னட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சமீபத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்,
உலக தடகள U20 சாம்பியன்ஷிப் – 10,000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் அமித்!
அதில் ரசிகர் ஒருவர் “ஒரு வாரமா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்ல நீங்க இல்லாம ரொம்ப வருத்தமா இருக்கு” என கமெண்ட் செய்தார். “இது என் பிரச்சனை இல்ல. நீங்கள் இயக்குநர் மற்றும் கதை எழுதுபவரிடம் தான் இதை கேட்க வேண்டும்” என்று கொந்தளித்துள்ளார். மேலும் கன்னட படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு கதாநாயகியாக இதுவே முதல் படம். இந்த படத்தை இயக்குநர் குருபிரசாத் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகர் ஜகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.