“ரோஜா” சீரியல் கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – நிஜமாவே அழுதாராம்!
சன் டிவி ரோஜா சீரியலில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரி ormax வெளியிட்ட சின்னத்திரை கதாபாத்திரங்கள் டாப் 5 லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ரோஜா சீரியல்:
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த சீரியல் ஆகும். இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிவுக்கரசி இதில் அர்ஜூன் பாட்டியாக நடித்து வருகிறார். டைகர் மாணிக்கம் மகள் ரோஜா சின்ன வயதில் தொலைந்து விட, அவள் சொந்த மாமா மகள் என தெரியாமல் கல்யாணம் செய்கிறார் ஹீரோ அர்ஜூன். இந்த ஒரு கதையில் தொடங்கிய இந்த சீரியல் இன்று பல எபிசோடுகளை தாண்டி டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கில் உள்ளது.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் சேவைகள் முடக்கம்!
ரோஜாவிற்கும், விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் தான் போட்டி நிலவி வருகிறது. அந்த வரிசையில் சீரியல் கதாபாத்திரங்களில் பிரபலமான டாப் 5 லிஸ்ட்டை சமீபத்தில் ormax வெளியிட்டு இருந்தது. அதில் ரோஜா தான் முதலிடம் பிடித்து இருந்தார். இரண்டாம் இடத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் இருக்க, கண்ணம்மாவுக்கு மூன்றாம் இடம் தான் கிடைத்து இருந்தது. தற்போது ரோஜா சீரியல் 900 எபிசோடுகளை கடந்தும் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
உலக தடகள U20 சாம்பியன்ஷிப் – 10,000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் அமித்!
டாப் 5 லிஸ்டில் முதலிடம் பிடித்தது குறித்து ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் சீரியலில் பாட்டி அவரை அனாதை என அடிக்கடி சொல்லும் போதும், தான் அம்மா பற்றி எமோஷனலாக பேசும்போது நான் நிஜமாகவே எமோஷ்னல் ஆகி விடுவேன், நிஜமாகவே கண்களில் இருந்து கண்ணீர் வரும் என தெரிவித்துள்ளார். முதலில் சீரியலில் நடிக்கும் போது தமிழ் தெரியாது. ஆனால் தற்போது தமிழ் நன்றாக தெரியும் என அவர் கூறியுள்ளார்.