தமிழகத்தில் இம்மாதம் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதுதான்!

0
தமிழகத்தில் இம்மாதம் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - காரணம் இதுதான்!
தமிழகத்தில் இம்மாதம் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - காரணம் இதுதான்!
தமிழகத்தில் இம்மாதம் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதுதான்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளி விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்தி வந்தனர். ஆனால் தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஓமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவ தொடங்கியது. அதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டது. அத்துடன் மாணவர்களின் கல்வி நலன் கருதி மீண்டும் பள்ளி கல்லூரிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.34,800/-

அத்துடன் தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் வாக்குச்சாவடிகளை அமைக்கும் பணிகள் நடைபெறும். இந்த தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதனால் பள்ளிகளில் வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் பள்ளிகள் 23ம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!