தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
அரசு கலந்தாய்வு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியானது. இதில் 10ம் வகுப்பில் தேர்வு எழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்தாக 12ம் வகுப்பில் இந்த வருடம் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. கடந்த ஜூலை 27ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பு? முக்கிய தகவல்!
மொத்தமுள்ள 1,20,000 இடங்களுக்கு சுமார் 4,70,000 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு முதல் முறையாக கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,98,56 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்போது கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் முதல் கட்ட கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 05) தொடங்கியுள்ளது. மேலும் அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் உடன் வரும் பெற்றோர்கள் கொரோனா மற்றும் குரங்கு அம்மை தொற்றை கருத்தில் கொண்டு கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் தங்களின் கல்வி தகுதி சான்றிதழ்கள் மாற்று முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.