தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பு? முக்கிய தகவல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அறிவுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஊழல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர்:
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. மேலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் இறப்பு, ஓய்வு மற்றும் சில காரணங்களால் காலியாக இருக்கும் பணியிடங்களில் தகுதியான வேறு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.தற்போதைய தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பல நல்ல திட்டங்களை
செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது. மேலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடைக்கான பகுதிகள் – முழு பட்டியல் இதோ!
இந்நிலையில், அரசு பணியாளர்களுக்கு உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமலே ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினை தொடர்ந்து அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசு பணியாளர்கள் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெரும் நாளன்று அல்லது அதற்கு சில நாட்கள் முன்பு ஏற்கனவே பணியில் உள்ள மூத்தோர்கள் விடுப்பில் சென்றுள்ளதை பயன்படுத்தி செயற்கையான காலிப்பணியிடங்களில் பதவி உயர்வு அளிப்பதை கட்டாயமாக தவிர்த்திடுமாறு அனைத்து நியமன அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் அரசு பணியாளர்களின் இறப்பு, ஓய்வு நீண்ட கால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப்பணியிடங்களை விதிகளின் படி நிரப்ப எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசு பணியாளர்கள் உரிய நேரத்தில் பதவி உயர்வு பெற ஏதுவாக தேர்ந்தோர் பெயர் பட்டியலை வெளியிடுவதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில நேரங்களில்தேர்ந்தோர் பட்டியல் தாமதமாக வெளியிடப்பட்டு முழு தகுதி உடையவர்களுக்கு உரிய காலத்தில் பதிவு உயர்வு பெற வாய்ப்பில்லாத நிலை ஏற்படுகிறது என்றும், சில அலுவலர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பதவி உயர்வு வழங்க செயற்கை காலிப்பணியிடங்களை உருவாக்குவதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.