தமிழக மக்களுக்கு காவல்துறை ஆணையாளரின் புதிய அறிவிப்பு – கஞ்சா விற்றால் நடவடிக்கை!
தமிழகத்தில் கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதை பொருட்கள்:
தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என்று ஒரு புறம் மக்கள் போராட்டம் செய்து வரும் நிலையில் மறுபுறம் தினந்தோறும் மது விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஊரடங்கு காலத்தில் மக்களால் வேலையிழந்து சிரமப்பட்டு வந்த நிலையிலும் மது கடைகளில் கூட்டம் அதிகமாக தான் இருந்தது. தினந்தோறும் மது அருந்தி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மதுப் பிரியர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கஞ்சா போன்ற போதை பொருட்களையும் உட்கொள்கின்றனர். இதனால் சுவாச கோளாறு, ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிர் விடும் சூழல் உருவாகிறது. இந்த நிலையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
கடந்த 2011ம் ஆண்டு முதல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்க தடை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Branch Manager பணிக்கு நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அதனால் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 09 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 51 கிலோ 170 கிராம் கஞ்சா, ரூ.60,270 ரொக்க பணம் மற்றும் 06 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம், 2 ஆட்டோக்கள் மற்றும் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.