மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.1000 – ஆட்சியர் அறிவிப்பு!!

0
மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.1000 - ஆட்சியர் அறிவிப்பு!!
மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.1000 - ஆட்சியர் அறிவிப்பு!!
மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.1000 – ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சீர்காழியில் மழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை குறித்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நிவாரண தொகை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. மேலும் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகள் வரலாற்றில் பதிவாகாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் சீர்காழியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் சேதமடைந்தன.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களை தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்தார். அதன்பின்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் சேதமடைந்த விளைநிலங்களுக்கேற்ப நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உஷார்.. தமிழகத்தில் நாளை மறுநாள் மின்தடை – பகுதிகளின் முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இது தொடர்பான அறிவிப்பை தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (நவ.24) முதல் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!