தமிழகத்தில் SSC MTS தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி – தலைமை செயலாளர் அறிக்கை!
மத்திய அரசின் MTS பணிக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு:
இந்தியாவில் மத்திய அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) போட்டித்தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. அண்மையில் MTS பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்த கூடிய தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு!
இதனை மாற்றும் வகையிலும் மத்திய அரசு துறை பணியிட போட்டித்தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்க ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், SSC MTS தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த MTS தேர்விற்கும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இன்று (பிப். 01) முதல் காணொலி வகுப்புகளை நடத்த உள்ளது.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது AIM TN என்ற காணொலிப்பாதையில் தேர்வுக்கான பயிற்சி காணொலிகளை பதிவேற்றம் செய்யவுள்ளது. அத்துடன் 30 மாதிரித்தேர்வுக்களையும் நடத்த திட்டமிட்டுள்ளது. நீங்கள் எழுதும் மாதிரித்தேர்வு ‘உனக்குள் தேடு’ என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.