தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் தொடக்க பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (13.10.2021) ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சற்று ஓய்ந்த நிலையில் தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் போன்றோரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டது. அனைவரும் மாணவர்களின் கல்வி நிலையை ஆராய்ந்து பள்ளிகள் திறப்பு அவசியம் என்ற கருத்துகளை முன்வைத்தனர். மறுபுறம் கொரோனா தொற்று சற்று வேகமெடுத்து பரவுகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்தது.
உதவி பேராசிரியர் பணிக்கு 2023 வரை PhD கட்டாயம் இல்லை – யுஜிசி அதிரடி!
இதற்கிடையில் நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் மாணவர்கள் நலனில் அதிக கவனம் தேவை என்பதால் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணிகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் (13.10.2021) ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது, விஜயதசமியை முன்னிட்டு கோயில்களை திறப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக்கல்வி ஆகிய துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.