மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
CSIR கீழ் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Technicians பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- CSIR கீழ் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CLRI) Technicians பணிக்கு என மொத்தமாக 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
- Technicians பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகள் / கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ITI தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் தோல் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Technicians பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது Level 2 (Rs.19,900 – 63,300) என்கிற ஊதிய அளவின் படி, ரூ.33,875/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Short List செய்யப்பட்டு Trade Test மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.