தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் மூடல் – கல்வித்துறை ஷாக் அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இனி செயல்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்பட்ட நிலையில் இந்த வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை.
Exams Daily Mobile App Download
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் அது சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக எந்த வகுப்புகளும் நடத்தப்படாமல் இருந்ததால் அரசுப் பள்ளிகளில் அந்த இரு வகுப்புகளையும் மூட பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்..!
மேலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படுவதால் அதற்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க சமூக நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.