தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதி தீவிரமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில் பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா 3ம் அலையை தொடர்ந்து அனைத்து விதமாக நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. இதை தொடர்ந்து மக்கள் மீண்டுமாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்துகொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் உயர்வடைந்து வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி தமிழகத்திலும் இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, கொரோனா தொடர்பான கவலைகள் எதுவும் இல்லாத நிலையில் நடப்பு கல்வியாண்டில் அங்கன்வாடி பள்ளிகள் முதற்கொண்டு 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா புதிய பாதிப்புகள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டுமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் நடத்துவது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதற்கும் இந்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையானது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.