இனி டாஸ்மாக் கடைகளில் ‘இது’ கட்டாயம் – மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனி மதுபான விற்பனையில் முறையாக ரசீது தர வேண்டும் என மேலாண்மை இயக்குனர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மேலும் கடைகளின் முன்பு உரிய விலைப்பட்டியல் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மதுபான கடைகள்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பியது. இதனால் அரசுக்கு வருவாய் அளிப்பதில் முன்னிலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தயார் செய்யப்பட்டு முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வருவதாக RTI அதிர்ச்சி அறிக்கை ஒன்றும் வெளியானது.
சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் இல்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, தற்போது டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் செப்.23 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுபானங்களின் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதுபானங்களை மொத்த விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோவில்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.