சீனாவின் ‘ஐபோன் சிட்டி’யில் 870 தொழிலாளர்கள் அண்டை மாகாணத்திற்கு மாற்றம் – கொரோனா பரவல் எதிரொலி!
சீனாவின் ‘ஐபோன் சிட்டி’ கொரோனா பரவல் காரணமாக 870 தொழிலாளர்களை அண்டை மாகாணத்தில் சுமார் 230 மைல் தொலைவில் உள்ள ஒரு மையத்திற்கு மாற்றி இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த செயலை செய்துள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஊழியர்கள் மாற்றம்:
சீனாவின் ஹெனான் மாகாணத்தின் தலைநகரம் Zhengzhou – “iPhone City” என்று அழைக்கப்படுகிறது. Apple Inc. இன் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தித் தளத்தின் தாயகமாக Zhengzhou இருக்கிறது. மேலும் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வன்முறை மோதல்களில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோக்கள் மூலமாக இந்த நிறுவனம் பிரபலமாகி இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இனி வாய்ஸ் ரெக்கார்டு ஆப்சன் – மாஸ் அப்டேட்!
Exams Daily Mobile App Download
அதனால் நேற்று (நவ. 25) 870 தொழிலாளர்கள் அண்டை மாகாணத்தில் சுமார் 230 மைல் தொலைவில் உள்ள ஜியாங்சு என்ற இடத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ WeChat கணக்கில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் கொடுத்து இருக்கின்றனர். Zhengzhou நகரத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்த ஐபோன் ஆலை அதிகம் கொரோனா பாதிப்பு இருக்கும் பகுதிகளின் பட்டியலில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.