பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது.
வந்தே பாரத் ரயில்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.13) முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்யாத பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஜன.13) மற்றும் நாளை (ஜன. 14) காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் வண்டி. எண்-06081) மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும், மருமார்கமாக அதே தேதியில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (06082) இரவு 11.35 மணிக்கு சென்னை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.