சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் 9 மாதங்களாக மின்பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதால் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து 10 நாட்களாக கடந்த மாதத்தில் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளின் விவரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டு அதன்படி மின்தடை செய்யப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மின்பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.
பாங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வின்றி பணி – தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
இதனை தொடர்ந்து சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதாகவும், இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மாலை 5 மணிக்குள் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று இரவு முதல் அதிகாலை வரை சென்னையில் மழை பெய்து வருவதால் ஒரு சில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளே வரும் 1-ம் தேதி முதல் இது கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் மதுரவாயல் பகுதியின் உள்ள எம்எம்டிஏ காலனி, வரலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், கங்கா நகர், ராஜீவ் காந்தி நகர், கணபதி நகர், ஐயப்பன் நகர், ராஜராஜன் நகர், பாலமுருகன் நகர், வானகரம் மேட்டுகுப்பம் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.