சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
தமிழகத்தில் மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவிர பிற இணையதளத்தில் வரும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மெட்ரோ நிர்வாகம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். பல நிறுவனங்களின் இணையதளத்தில் வேலை வேண்டி பதிவு செய்கின்றனர். மேலும் வேலை தேடுபவர்களுக்காகவே புதிய இணையதளங்கள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு தகவல்கள் பகிரப்படுகிறது. இந்த நிலையில் மோசடி கும்பல் சில போலியான இணையதளங்களை உருவாக்கி பொய்யான வேலைவாய்ப்பு குறித்து பதிவு செய்து அதன் மூலம் வேலை தேடுபவர்களை குறி வைத்து பணம் கையாடல் செய்யும் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழக பள்ளி, கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் – தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு? முக்கிய வலியுறுத்தல்!
போலி இணையதளங்களை உண்மை என நம்பி வேலை தேடும் நபர் முழு விவரத்தையும் பதிவு செய்கின்றனர். இதனை வைத்து மோசடி கும்பல் வேலை தேடுபவர்களின் விவரத்தை சேகரித்து அவர்களின் தொலைபேசி எண் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு துறைகள் உள்ளது. இந்த துறைகளிலோ துறை சார்ந்த பிரிவுகளிலோ ஏதேனும் வேலை வாய்ப்பு இருப்பின் அதற்கான முன் அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – நிதியமைச்சகம் தகவல்!
வேலை நாடுநர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்வோம். மேலும் நாளிதழ்களிலும் வெளியிடப்படும். மெட்ரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவிர பிற இணையதளத்தில் அவ்வப்போது வெளிவரும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டும். போலி அறிவிப்புக்கு எந்த விதத்திலும் இந்த நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துள்ளது.