தமிழக பள்ளி, கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் – தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு? முக்கிய வலியுறுத்தல்!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடத்தும் முறையில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் மாணவர்களுக்கான தேர்ச்சி சதவீத மதிப்பெண் குறைக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்ச்சி மதிப்பெண்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களின் கற்றல் இழப்பு காரணமாக ஆன்லைன் வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அனைத்து பருவத் தேர்வுகளும் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – நிதியமைச்சகம் தகவல்!
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு 2 மாத காலங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரடி தேர்வு முறையை பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – அரசாணை வெளியீடு!
அதனை தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் நேரடி பொதுத்தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய நேரடி தேர்வு முறை மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் விதமாக அமையும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் நேரடி தேர்விற்கு தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.