Vijay TV Bigg Boss 5 | ராஜு தான் வின்னர், வலுவான போட்டியாளர்கள் யார் யார்? மக்களின் கருத்து!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் ஏழாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இன்றைய எபிசோடில் கமல் வந்து பார்வையாளர்களிடம் இந்த சீசன் பற்றி சில கேள்விகளை கேட்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 50 நாட்களை நெருங்க இருக்கிறது. கடந்த மாதம் அக்.3 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதில் 6 பேர் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவதாக வெளியேறிய அபிஷேக் ராஜா வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் மீண்டும் அனுப்பப்பட்டார். இனிமேல் கன்டென்ட் குறைவில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா பிரசவ அறையில் எடுத்த வீடியோ – குவியும் லைக்குகள்!
இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 50 நாட்களை நெருங்கி உள்ளது. இந்த சீசன் குறித்த உங்களது கருத்து என்ன என பார்வையாளர்களிடம் கேள்வி கேட்கிறார். அப்போது ராஜு ரொம்ப ஸ்டார்ங் போட்டியாளர் என ஒருவர் சொல்ல, சிபி ராஜு வருண் பசங்க அனைவரும் கடுமையான போட்டியாளராக இருப்பதாக ஒருவர் சொல்கிறார். அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா என்று ஒருவர் சொல்கிறார்.
பிரசவத்திற்கு பின் உடல்நிலை மோசமான ‘பாரதி கண்ணம்மா’ பரினா? அவரது கணவர் அளித்த விளக்கம்!
அப்போது கமல் அபிஷேக் வந்து ஒரு நாள் தான் ஆகிறது என நினைப்பதாக சிரித்துக் கொண்டே சொல்கிறார். மற்றொரு பெண் இந்த சீசனில் போட்டியாளர்கள் இடையே அதிக வஞ்சன்ஸ் இருப்பது போல தெரிகிறது என சொல்கிறார். பின் இறுதியாக நடிகர் கமல் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்கிறார். இன்றைய எபிசோடில் வேறு என்னவெல்லாம் நடக்கும் என எதிர்பார்ப்பு இந்த ப்ரோமோ பார்த்த பின் அதிகரித்துள்ளது.