பிரசவத்திற்கு பின் உடல்நிலை மோசமான ‘பாரதி கண்ணம்மா’ பரினா? அவரது கணவர் அளித்த விளக்கம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவரது கணவர் முதன்முறையாக பிரசவம் மற்றும் குழந்தை உடல்நலம் குறித்த வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.
நடிகை பரீனா:
தமிழ் சின்னத்திரையில் இளம் வில்லிகளில் ஒருவராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பரீனா. அவர் நிறைமாத கர்ப்பமாக இருந்தால் கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதன் பின் அவருக்கு கடந்த 16 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பரீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்ததும் முதன்முறையாக அவரது கணவர் ரகுமான் அவர்களின் சொந்த யூடுப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ – மார்ச் 31 ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அதில், பரீனா இந்த பிரசவ காலத்தில் பல ரிஸ்க்கான போட்டோஷூட்களை எடுத்தார். அதனால் எனக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. மேலும் நீச்சல், யோகா, உடற்பயிற்சி என பல விஷயங்களில் அவர் பங்கேற்றார். அது எல்லாம் எனக்கு பயம் தந்தது ஆனால் அவள் செய்தது அனைத்துமே சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக அவள் செய்தாள். அவளது உடல் மட்டுமல்லாமல் மனதும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என தயார்படுத்தினார். அது எனக்கு தாமதமாக தான் புரிந்தது. ஆரம்பத்தில் எல்லாரும் திட்டுனாங்க இதெல்லாம் தேவையா என்று ஆனால் அது எல்லாமே மருத்துவரின் ஆலோசனைப்படி தான் நடந்தது.
விஷால் பட வில்லியாக மாறிய “பாரதி கண்ணம்மா” வினுஷா – வைரலாகும் “டிக்டாக்” வீடியோ!
முதலில் தாய் தைரியமாக இருக்க வேண்டும் அதை தான் பரீனா செய்தார். எங்களுக்கு பலர் பிரசவம் தாமதம் ஆகுது இது பொண்ணு என்று சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு பையன் தான் பிறந்தது. எங்களை பொறுத்தவரை எந்த குழந்தையோ அது நலமுடன் இருந்தால் போதும் என நினைத்தோம். அது போலவே எங்களுக்கு நலமுடன் பையன் பிறந்திருக்கான். இருவரும் நலமுடன் இருக்கிறார்கள். மேலும் முக்கியமாக எங்களுடைய குழந்தை என சொல்லி ஒரு யூடுப் சேனலில் குழந்தையின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது. இது போல செய்யாதீங்க என ரகுமான் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.