சென்னை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – போலீசார் அறிவிப்பு!!

0
சென்னை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு!!
சென்னை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு!!
சென்னை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – போலீசார் அறிவிப்பு!!

தலைநகர் சென்னையில் வரும் 11ம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாரத்தான்:

சென்னையில் அவ்வப்போது முக்கிய நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொள்வர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இந்த மாரத்தான் போட்டிகளின் போது போட்டி நடைபெறும் இடங்களில் வாகன போக்குவரத்திற்கு அனுமதி இல்லை. போக்குவரத்து துறை சார்பாக மாற்று பாதைகள் அமைக்கப்படும். அதே போல வரும் 11ம் தேதி சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. சாஸ்திரி நகரில் தொடங்கி விவேகானந்தர் இல்லம் வரை இந்த போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.800 கோடி நிதியில் தொடக்க, நடுநிலை பள்ளி வகுப்பறைகள் – அரசாணை வெளியீடு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

போட்டியானது காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!