தமிழகத்தில் ரூ.800 கோடி நிதியில் தொடக்க, நடுநிலை பள்ளி வகுப்பறைகள் – அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டியிருந்த நிலையில், தற்போது இதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் 6,000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. நாளையும் (டிச.10) விடுமுறை அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன்படி, 609 பள்ளிகளில் 2 முதல் 7 கூடுதல் வகுப்பறைகள் என 2875 வகுப்பறைகள் ரூ.402 கோடியே 50 லட்சம் செலவிலும், பள்ளியின் கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்ட வகுப்புகளில் ரூ.162 கோடி செலவிலும் என்று பல பிரிவுகளாக திட்டம் இறுதி செய்யப்பட்டு ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் அரசுக்கு திட்டம் தொடர்பான கடிதத்தை அனுப்பினார். இதனால் கூடுதல் வகுப்பறைகள் திட்டத்திற்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று தமிழக தலைமை செயலாளர் அமுதா அவர்கள் அறிவித்துள்ளார்.