பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. நாளையும் (டிச.10) விடுமுறை அறிவிப்பு!
தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடுமுறை
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வட தமிழகம், புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் புயல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (டிச. 9) 29 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு!
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து, தற்போது புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.09) மற்றும் நாளையும் (டிச.10) விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.