சென்னை – மதுரை இடையே அதிவேக ரயில் சேவை? இந்திய ரயில்வே தகவல்!
சென்னை முதல் மதுரை வரை அதிவேக ரயில் செயல்படுவதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கடைசி வரை படித்து தெரிந்து கொள்ளவும்.
அதிவேக ரயில் பயணம்
இந்திய மக்களின் போக்குவரத்தில் இன்றியமையாத சாதனமாகவும், குறைவான கட்டணம் கொண்ட போக்குவரத்து சேவையையும் ரயில்வே துறை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ரயில் பிரயாணம் எப்படி நல்லவையாக கருதப்படுகிறார்களோ, அதே அளவு ரயில்வே துறையின் பாரம்பரியத்திலும் இன்றியமையாததாக இருக்கிறது. அதாவது, பிற போக்குவரத்து சேவைகளுடன் ஒப்பிடும் வகையில், இது தேசிய அல்லது சர்வதேச பகுதியில் அதிக பொருளாதார மற்றும் பாதுகாப்பான முறையாக கையாளப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது, ரயில் பயணம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ஒன்று. ரயில் பயணம் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப உள்ளதால் அதிகம் விரும்புகின்றனர். தொலை தூரம் இருக்கும் ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு ரயில் பயணம் அதிகம் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, மக்களின் வசதிகளுக்கு ஏற்ப அதிவேக ரயில் சேவைகளும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிவேக ரயில் சேவை சென்னை முதல் மதுரை இடையே இயக்க உள்ளதால் ஆரம்ப கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இனி 4 வருட இளங்கலை படிப்பிற்கு பிறகு PhD தொடர அனுமதி – UGC அறிவிப்பு!
அதாவது இந்த பணிகளை மேற்கொள்ளும் போது, இந்த வழித்தடத்தில், ரயில் பாதையின் தரத்தின் அளவு உயர்த்துவது, தேவையற்ற வளைவு, நெளிவுகளை நீக்குவது, பாலங்களின் உறுதி தன்மையை கண்டறிவது, மேலும் என்னென்ன புதிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பன பற்றிய பல்வேறு பணிகள் குறித்தும், ஆய்வில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளன. ஆனால் முந்தைய ரயில் சேவையை விட, இந்த அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ரயில் சென்று விடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்