சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார விற்பனையில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 25) விற்பனையில் ஒரு சவரன் தங்கம் ரூ.16 வரை விலை உயர்வை கண்டுள்ளது.
விலை உயர்வு
தற்போது நெருங்கி வந்து கொண்டிருக்கும் பண்டிகை கால நாட்களில் பல்வேறு வகையான வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் சலுகைகளை அறிவித்து வருகிறது. பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் விற்பனை அமோகமாக இருக்கும். அதே போல இந்த ஆண்டும் பண்டிகை நாட்களையொட்டி கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருகிறது.
அக்.4 வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
குறிப்பாக இந்த வார துவக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக சரிவை கண்டு வந்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 25) நாளுக்கான விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வை கண்டுள்ளது.
நாடு முழுவதும் அக்.30 வரை முழு ஊரடங்கு அமல்? உண்மை நிலவரம் இதுதான்!
அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய நிலவரத்தின் படி சவரனுக்கு ரூ.16 மட்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் நகை ரூ.34,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,364க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் வரை குறைந்து கிராமுக்கு ரூ.64.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.