நாடு முழுவதும் அக்.30 வரை முழு ஊரடங்கு அமல்? உண்மை நிலவரம் இதுதான்!
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் வருகிற அக்டோபர் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது தொடர்பான உண்மை நிலவரத்தை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு:
கொரோனா 2வது அலையால் நாடு முழுவதும் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொருளாதார சரிவை கருதி மாநில வாரியாக பொதுமுடக்க கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி நடைபெற்று வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,733 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
முதல் அலையின் போது நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலானதால் உயிரிழப்புகள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. ஆனால் 2வது அலையில் மாநிலத்திற்கு மாநிலம் கட்டுப்பாடுகள் வேறுபட்டதின் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சில தொய்வுகள் ஏற்பட்டது. தினசரி பலி எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது 3வது அலை அச்சம் அதிகரித்து உள்ளது. இதனால் மாநில அரசுகள் தளர்வுகள் வழங்குவதில் கவனம் செலுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு தொடர்பான போலி தகவல்களும் பரவி வருகிறது. உள்துறை அமைச்சகம் (MHA) செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 30 வரை நாட்டில் ஒரு முழுமையான ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு? குழப்பத்தில் அரசு!!
இது தொடர்பாக PIB விளக்கம் அளித்துள்ளது. அதன்படி இந்த செய்தி போலியானது, A1Bharat News என்ற பெயரில் உள்ள அந்த வீடியோவில் முற்றிலும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய அதிகாரபூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா குறித்த போலி தகவல்கள் பரவியதில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.