சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரனுக்கு ரூ.104 வீழ்ச்சி!
சென்னையில் இன்று (செப்டம்பர் 27) மாலை நடந்து கொண்டிருக்கும் ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் ஒரு சவரன் நகை ரூ.104 வரை குறைவை கண்டு சவரனுக்கு ரூ.34,808 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாலை விற்பனை
தற்போதுள்ள காலங்களில் ஆபரணத் தங்கத்தை சேர்த்து வைப்பது சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. குறிப்பாக அவசரம் அல்லது அத்தியாவசிய காலங்களில் பணம் இல்லாத பட்சத்திலும் கூட சேமித்து வைத்துள்ள தங்க நகைகள் தான் கைகொடுக்கும். அதனால் தான் நம் மக்கள் ஆபரணத் தங்க நகைகளின் மீது அதிகளவு ஆர்வத்தை கொண்டுள்ளனர்.
நீட், டாஸ்மாக் போராட்ட வழக்குகள் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் அதிரடி உத்தரவு!
இப்படி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாள் விற்பனையிலும் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியான ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 27) ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் விலை காலை, மாலை என இரு நேரங்களிலும் சிறிது மாற்றமடைந்துள்ளது.
ஆதார் மையம் அமைக்க திட்டமா? கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ!
அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை விற்பனையில் சவரனுக்கு ரூ.104 வரை குறைந்துள்ளது. அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கமும் ரூ.4,351 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சவரன் நகை ரூ.34,808க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.