நீட், டாஸ்மாக் போராட்ட வழக்குகள் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய பலரின் மேல் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
முதல்வரின் உத்தரவு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்து 150 நாட்கள் கடந்து விட்டது. அதில், அரசின் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இனி அமல்படுத்த இருக்கும் பல திட்டங்கள் பற்றியும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்பாக மட்டுமில்லாமல் அனைத்தும் செயல் வடிவம் பெறுவதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய IT துறையில் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் திட்டம்!
மேலும் முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடிய விவசாயிகள், எட்டு வழிசாலை, கூடங்குளம் அணுமின் நிலையம், நியூட்ரினோ திட்டம் போன்றவற்றிற்கு எதிராக போராடிய பொதுமக்கள் மற்றும் ஆதரவு தெரிவித்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு தொடுத்திருந்த 5,570 வழக்குகள் அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவிற்கு மக்களிடம் பலத்த ஆதரவு இருந்தது.
ஆதார் மையம் அமைக்க திட்டமா? கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் இதோ!
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய 446 பேர் மற்றும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியும் 422 பேர் என்று மொத்தம் 868 பேர் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்குகளின் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடுவதாக அரசு அறிவித்துள்ளது.