சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக ஏராளமான தொழில்கள் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகமும் பாதிப்படைந்தது. நாடு முழுவதும் பலர் வேலை இழந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அன்று முதல் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.
தமிழக காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
எனவே ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதனால் தங்க நகைகள் வாங்குவோர் சிரமப்பட்டனர். கடந்த வருடம் முதல் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை தற்போது விலை ஏற்றத்திலே இருந்து இருந்து வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுக்கடுக்கான மோசடிகள்! பொதுமக்கள் போராட்டம்!
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்துள்ளது. எனவே ஆபரணத் தங்கம் சவரன் ரூ.36,432-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,554-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்க விலையை தொடர்ந்து சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.