தமிழக காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாக கூறி ஒரு தவறான தகவல் வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக காவல்துறை விளக்கமளித்து வருகிறது.
போலி தகவல்:
தற்போதைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலமும் அதில் உள்ள இன்டர்நெட் மூலமாகவும் நாம் நிறைய தகவல்களை அறிந்து வருகிறோம். எளிமையாக ஒருவரை தொடர்பு கொள்கிறோம். அனைத்து வேலைகளும் நமக்கு எளிமையாகி விட்டது. சமூக வலைத்தளங்கள் ஒரு புறம் நமக்கு பயனுள்ளவையாக இருந்தாலும் மற்றொரு புறம் அதனால் தீமையும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக போலி தகவல்கள் அதிகம் சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் தொற்று பரவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள பொது நிறைய தவறான ஆதாரமில்லாத தகவல்கள் பகிரப்பட்டது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுக்கடுக்கான மோசடிகள்! பொதுமக்கள் போராட்டம்!
இவற்றை உண்மை என நம்பும் மக்கள் சில சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அதிக பயனர்களால் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் தினந்தோறும் எண்ணற்ற தவறான தகவல் பகிரப்படுகிறது. ஒருவருக்கும் வரும் இந்த தகவலை பகிரும்படி அதில் கேட்டு கொள்ளப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரும் அதன் உண்மை தன்மையை ஆராயாமல் பகிர்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆட்டோவில் தனியாக செல்லும் பெண்கள் பயணம் செய்யும் போது 9969777888 என்ற எண்ணிற்கு நீங்கள் பயணிக்கும் வாகன எண்ணை அனுப்பினால் காவல் துறை அந்த வாகனத்தை GPPS மூலம் அந்த வாகனம் காண்பிக்கப்படும் என்ற போலி தகவல் பகிரப்பட்டு வருகிறது.
நாளை (நவம்பர் 11) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
ஆனால் உண்மை தகவல் என்னவென்றால் பெண்கள் அவசர காலங்களில் காவலன் SOS செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்பது தான் உண்மையான தகவல் ஆனால் மேற்கண்டவாறு தகவல் மாற்றப்பட்டு வாட்ஸ் அப்பில் பகிர பட்டிருக்கிறது. இது தவறு என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. சரியான தகவலை பகிரவிட்டாலும் தவறான தகவலை பகிர வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.