தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுக்கடுக்கான மோசடிகள்! பொதுமக்கள் போராட்டம்!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நகைக்கடன் வழங்கியதில் கூட்டுறவு வங்கி மோசடி செய்து ஏமாற்றியுள்ளது. அதனால் பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகைக்கடன் மோசடி:
மக்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் விதமாக தொடங்கப்பட்டது தான் கூட்டுறவு வங்கிகள். அத்தகைய கூட்டுறவு வங்கிகளில் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவது தெரிய வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே செட்டிபட்டி என்னும் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
SBI ATM கார்டு PIN நம்பர் மாற்றுவது எப்படி? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! எளிய வழிமுறைகள்!
இந்த வங்கியின் மூலம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்த வட்டியில் விவசாயத்திற்காக நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் பெரும்பாலும் இந்த வங்கியில் நகைக்கடன் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் நகை கடன் வைத்த 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டதாக கூறி அவர்களது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரவு வைக்கப்பட்ட கடன் தொகை கடன் பெற்றவர்களுக்கு கையில் கொடுக்கப்படவில்லை.
நாளை (நவம்பர் 11) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
அவ்வாறு கடன் தொகை வழங்கப்படாத நிலையில் வங்கி நிர்வாகம் வாங்காத கடன் தொகைக்கு வட்டி கட்டுமாறு வற்புறுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நகையை ஏலம் விடப்போவதாக வங்கி நிர்வாகம் மிரட்டி வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி மேற்பார்வையாளர் மற்றும் பொது மக்களிடம் நடத்திய பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.