![நாளை (நவம்பர் 11) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு! நாளை (நவம்பர் 11) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/11/நாளை-நவம்பர்-11-அரசு-பொது-விடுமுறை-768x576.jpg)
நாளை (நவம்பர் 11) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சத் பூஜையை முன்னிட்டு நவம்பர் 11ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அரசின் அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலின் பாதிப்புகள் குறைந்துள்ளதை அடுத்து அக்டோபர் 10ம் தேதி முதல் மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் வழக்கமான நேரத்தின் படி திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 11 ஆம் தேதி அங்கு துர்கா பூஜை பண்டிகை தொடங்கியது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளின்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் அது நீக்கப்பட்டது.
WhatsApp பயனர்களின் கவனத்திற்கு – குரூப் மெசேஜ்களை படித்தவர்கள் யார்? விபரங்களை கண்டறிவது எப்படி?
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கொண்டாடப்படும் சத் பூஜை வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். அதிலும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் குறிப்பாக சிறப்பாக அனுசரிக்கப்படும். சத் பூஜை உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மக்களுக்கு முக்கிய பண்டிகையாகும். நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கொண்டாடப்படும் இந்த பூஜைக்காக மேற்கு வங்கத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள பராபஜார் போஸ்டா வியாபாரிகள் சங்கத்தில் நடைபெற்ற ஜெகதாத்ரி பூஜையின் தொடக்க விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கொண்டார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி தேசிய திறன் கணக்கெடுப்பு!
அப்போது, நவம்பர் 11ம் தேதியான நாளை சத் பூஜையை முன்னிட்டு பொது விடுமுறை தினமாக அறிவித்து உத்தரவிட்டார். மேலும் நவம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் நதியா மற்றும் ஹூக்ளி ஆகிய இரண்டு மாவட்டங்களில் பண்டிகைகள் காரணமாக இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. பொது விடுமுறை அறிவிப்பினால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் நாளை செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.