சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில், தற்போது அதிரடியாக சவரனுக்கு ரூ.304 அதிகரித்து உள்ளது. இந்த விலை ஏற்றத்தினால் நகைப்பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
பங்குச் சந்தையில் முக்கிய காரணியாக இருக்கும் தங்கமானது நாட்களாக அதிக விலை உயர்வை சந்தித்து வருகிறது. கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் பங்கு சந்தையின் மற்ற அனைத்து பங்குகளும் சரிவை சந்தித்தது. ஆனால் தங்கத்தின் விலை மட்டுமே நிலையானதாக இருந்தது. இதனால் பங்கு முதலீட்டாளர்கள் அனைவரின் கவனமும் தங்கத்தின் மீது திரும்பியது. ஆனால் எதிர்பாராத விதமாக ஆரம்பித்த உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் பங்கு சந்தையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – இனி பாமாயில் விலை குறையும்!
இந்நிலையில் தங்கத்தின் விலையானது காலை மற்றும் மாலை என்று இரு வேலைகளிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று மாலை நிலவரத்தின்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.16 அதிகரித்து ரூ.4,755 ஆக விற்பனை ஆனது. வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.65 க்கு விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ரூ.4,793-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.30-க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளியானது 63,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.