இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – இனி பாமாயில் விலை குறையும்!

0
இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் - இனி பாமாயில் விலை குறையும்!
இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் - இனி பாமாயில் விலை குறையும்!
இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – இனி பாமாயில் விலை குறையும்!

நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணி நடத்தியதை அடுத்து கடந்த 3 வார காலமாக இருந்து வந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை, திங்கட்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இன்று தெரிவித்தார். எனவே தடை நீங்கியதை தொடர்ந்து, அதை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் பாமாயில் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிகிறது.

எண்ணெய் விலை குறையும்:

உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் அடங்கும். இந்தோனேசியாவில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யக்கூடிய 5.5 கோடி டன் எண்ணெயில், 3.4 கோடி டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் உள்நாட்டு தேவைக்கு மீதம் உள்ள டன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையே இந்தோனேசியா தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். அந்நாட்டில் பாமாயில் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதையடுத்து, இந்தோனேசிய அரசு இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது என்று உலக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதியை தடை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத உள்ளோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை – முக்கிய பாடத்தலைப்புகள்!

மேலும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சுத்திகரிக்கப்படாத பாமாயில், சமையலுக்கான பாமாயில் என அனைத்து வகைகளின் ஏற்றுமதிக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெயின் விலை குறையும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என அரசு அறிவித்திருந்தது. அரசின் முடிவின் காரணமாக பாதிப்பு அடைந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாமாயிலுக்கான ஏற்றுமதிக்கு வரும் 23ல் இருந்து தடை விலக்கப்படுவதாக இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!