ரூ.8,000/- ஊக்கத்தொகையுடன் கூடிய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள MTS, Security Guard, Animal Keeper ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Chennai District Collector Office |
பணியின் பெயர் | MTS, Security Guard, Animal Keeper |
பணியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட ஆட்சியர் அலுவலக காலிப்பணியிடங்கள்:
சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Multi Tasking Staff பணிக்கு என 11 பணியிடமும், Security Guard பணிக்கு என 2 பணியிடமும், Animal Keeper பணிக்கு என 2 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
MTS, Security Guard, Animal Keeper தகுதிகள்:
MTS, Security Guard, Animal Keeper ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
MTS, Security Guard, Animal Keeper வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.
விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஊக்கத்தொகை:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு மாதந்தோறும் ரூ.8,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 20.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
Join Our TNPSC Coaching Center
தபால் செய்ய வேண்டிய முகவரி:
முதன்மை ஆராய்ச்சி அலுவலர் / இயக்குநர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை,
சென்னை – 600 106.