தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கான ‘செக்’ – கல்வித்துறை புதிய நடவடிக்கை!

0
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கான 'செக்' - கல்வித்துறை புதிய நடவடிக்கை!
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கான 'செக்' - கல்வித்துறை புதிய நடவடிக்கை!

தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கான ‘செக்’ – கல்வித்துறை புதிய நடவடிக்கை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளி கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கல்வித்துறையில் விவரங்களை தலைமையாசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிரடி உத்தரவு:

கொரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. மேலும் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படத்துவங்கி, இறுதித்தேர்வுகளும் முடிவடைந்து விட்டன. இதை தொடர்ந்து கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழக பள்ளிகள் கடந்த 13ம் தேதி திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் நடப்புக்கல்வியாண்டில், பள்ளிக்கு சரியாக வராத, இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணிகளில் கல்வித்துறை இறங்கியுள்ளது. இதுதொடர்பாக, 41 பக்கங்கள் கொண்ட உத்தரவுகளை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வாரத்திற்கு, 3 முதல் 4 நாட்கள் பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் குறித்து, கல்வித்துறையில் தலைமை ஆசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கான பிரத்யேக திட்டம் அறிமுகம் – முக்கிய அறிவிப்பு!

மேலும் 2 வாரங்களில், 6 முதல் அதற்கும் மேலாக பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவில்லை எனில், வட்டார வளமைய பயிற்றுநர்கள், தங்களுக்கான பகுதியில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று வாரங்களில் ஒன்பது நாள் மற்றும் அதற்கும் மேலாக மாணவர்கள் வரவில்லை எனில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அதுகுறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு வாரங்களில் மாணவர்கள் முழுமையாக வரவில்லை என்றால், அவர்கள் பள்ளிக்கு வராதவர்கள், இடை நின்றவர்கள் என்று கருதப்பட்டு, அந்த மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!