ரேஷன் அட்டைதாரர்களுக்கான பிரத்யேக திட்டம் அறிமுகம் – முக்கிய அறிவிப்பு!
ரேஷன் டீலர்களின் கடைகள் பொது சேவை மையமாக மாற்றப்படவுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்:
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் மலிவு விலை பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இது போக மத்திய அரசும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பல விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்திரப்பிரதேச அரசாங்கம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே சுமார் 3.5 கோடி ரேஷன் டீலர்கள் இருக்கின்றனர். அதாவது, இந்த டீலர்களில் 80 ஆயிரம் ரேஷன் டீலர்களின் கடைகள் பொது சேவை மையமாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, பொது சேவை மையங்கள் தொடங்குவதன் மூலமாக கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எளிமையாக அரசின் நலத் திட்டங்களை பெற முடியும். அதாவது, ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா, பிஎம் உஜ்வாலா இணைப்பு, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் ஓய்வூதியத் திட்டம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா, பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டு திட்டம் ஆகிய திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் இந்த பொது சேவை மையம் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும், பிரதமர் தெருவோர விற்பனையாளர் சுயசார்பு நிதி, இந்திய தேர்தல் ஆணையம் சேவைகள், பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு விண்ணப்பங்கள், டிஜிபே, இ-கோர்ட் சேவைகள், திறன் மேம்பாடு திட்டங்கள் மற்றும் படிப்புகள், வேலை வாய்ப்பு இணையதளங்கள், இ மாவட்ட சேவைகள், இ முத்திரை, இ வாகன சாரதி போக்குவரத்து சேவைகள், வங்கி மித்ரா, வங்கி தொடர்பான சேவைகள், காப்பீட்டு சேவைகள், ஃபாஸ்டேக் சேவை, சிபில் கோரிக்கை, பயன்பாட்டு பில் செலுத்துதல், மொபைல் / டிடிஎச் ரீசார்ஜ், ஐ இ டிஆர் ஆகிய சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் ரேஷன் வியாபாரி இருவருமே பயனடையலாம். அதாவது, இந்த அருமையான திட்டத்தின் வாயிலாக ரேஷன் கார்டுதாரர் ஐஇடிஆர் குவிண்டாலுக்கு ரூ.20 உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.