பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம் – பெற்றோர்கள் கோரிக்கை!
கோடை வெப்பம் அதிக அளவில் இருந்து வருவதால் டெல்லி NCR முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க கோரி டெல்லி பெற்றோர் சங்கம் லெப்டினன்ட் கவர்னர், NHRC மற்றும் NCPCR க்கு கடிதம் எழுதியுள்ளது.
கோடை விடுமுறை:
திங்கள்கிழமையான நேற்று, டெல்லி பெற்றோர் சங்கம், டிபிஏ, லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) ஆகியவற்றுக்கு டெல்லி முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கொடிய சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக கோடை விடுமுறையை அறிவிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, டெல்லியின் பல பகுதிகளில் வெப்ப நிலை 49.2 டிகிரிக்கு சென்றதுடன் தில்லி என்சிஆர் வழியாக ஒரு மோசமான வெப்ப அலை வீசியது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டுதல்கள்!
இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தில், “டெல்லியில் கடுமையான வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடுமையான வெப்பத்தால் பல குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளின் வருகை குறைந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது என்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், குழந்தைகள் மதியம் 12 முதல் 2 மணி வரை வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “எப்போதும் அதிகரித்து வரும் வெயிலால் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதையும், பள்ளிகளில் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதையும் நாங்கள் இத்தனை நாட்களாகப் பார்த்து வருகிறோம். எனவே இந்த கருத்தில் காலதாமதமின்றி உடனடியாக பள்ளிகளை மூடிவிட்டு விடுமுறை அறிவிக்க வேண்டும்” என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.