தமிழக அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ஏராளமான அரசு பணியாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதனால் பல நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறைக்கு மாறினார். இருப்பினும் அந்த ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மட்டும் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்க அயராது உழைத்தனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதிகமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அவர்கள் நலன் கருதி தமிழக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது.
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!
இதன் அடிப்படையில் புதிய மருத்துவ காப்பீடு 2021 திட்டத்தின் படி, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 300 பெறப்படுகிறது. இதன் மூலம் எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம். மேலும் புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளில் நோய் தடுப்பாற்றல் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, விபத்து, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற நிதி உச்சவரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.