தமிழக ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு – கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால் இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. தற்போது இந்த கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர நடத்தப்படவில்லை. அத்துடன் ஆசிரியர் பணியிடத்திற்கான காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்டவை நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் உள்ளிட்டவை நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மலை சுழற்சி மாறுதலில் குழப்பம் நிலவியதால் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவது நிறுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது இது குறித்த அறிவிப்பை தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். இவர் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Scientist ஆக ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! முழு தகவல்களுடன்..!
இதே போல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி அன்றும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளதால் SMS மூலமாக Seniority list அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வெளியிட்ட பிறகு எந்தவொரு திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது என்றும் இதில் ஏற்படும் பின்விளைவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.