TN TRB தேர்வு தேதியில் மாற்றம்? தேர்வர்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு தேதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பின் பணி ஆணை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இந்த டெட் தேர்வு நடைபெறவில்லை. இதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நிரப்புவதற்கு தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
Exams Daily Mobile App Download
அதில் பட்டதாரி ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் முதல் தாள் எழுத விண்ணப்பிக்கலாம் அதே போல ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் 2ம் தாள் எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது. தேர்விற்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் TET முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்தது. இந்த நிலையில் திடீரென தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி TET 2022 முதல் தாளுக்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
ஏனெனில் TET முதல் தாள் தேர்வு நடைபெறும் நாளன்று இந்து அறநிலையத்துறை தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது TET மற்றும் இந்து அறநிலையத்துறை இந்த இரண்டு தேர்வையும் ஒரே நாளில் நடத்தினால், ஏதாவது ஒரு தேர்வை விண்ணப்பதாரர்கள் எழுத முடியாத நிலை ஏற்படும். அதனால் தேர்வர்களின் நலன் கருதி தமிழக ஆசிரியர் தேர்வாணையம் TET முதல் தாள் தேர்வு தேதியை மாற்றியமைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது.