தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் காலை சிற்றுண்டியை முடிப்பதற்கு ஏதுவாக பள்ளி நேரத்தை பாதிக்காத வண்ணம் வேலை நேரம் மாற்றப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேர மாற்றம்

தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவித்தபடி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால் அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி தற்போது அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இவர் கூறியதாவது, அடுத்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அன்று பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ம் தேதி அன்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி அன்றும் பொதுத்தேர்வு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தை முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரசு செயல்படுத்த உள்ளது.

சீனாவில் ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி – திணறும் மக்கள்!

மேலும் காலை சிற்றுண்டியை முடிப்பதற்கு 30 நிமிடங்களாவது தேவைப்படும் என்பதால் பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு வர வேண்டியிருக்கும். அதனால் பள்ளி வேலை நேரத்தை பாதிக்காத வண்ணம் பள்ளி நேர மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் கூறினார். அதன்படி சிற்றுண்டி வழங்கப்பட்ட பின்பு 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!