சீனாவில் ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி – திணறும் மக்கள்!
சீனாவில் தான் தற்போது கொரோனா அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. மக்கள் வீட்டை விட்டு கூட வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது கொரோனா பரவுதலை தடுக்கவும் மக்களுக்கு நோய் அண்டாதவாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் இரண்டு தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
மற்ற நாடுகளை விட சீனாவில் தான் அதிகமான பாதிப்பு இருந்தது. பல லட்சக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் ஓரளவுக்கு ஆரம்பித்தது. மக்களும் பழையபடி பொது இடங்களில் நடமாடத் துவங்கினர். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. சீனாவிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பூஜ்ஜியத்தில் இருந்தது. ஆனால், தற்போது சீனாவில் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சீனா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த கொரோனா பரவலினால் பல நிறுவனங்களில் முதலீடு குறைந்துள்ளது. பழையபடி அனைத்து நிறுவனத்தையும் வளர்ச்சியடைய செய்ய பல ஆண்டுகள் தேவைப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது சீனா முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வளர்ச்சியடைய வைக்கக்கூட யோசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு சீனாவை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றன