சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு!
அதிக பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு, அரசு பத்திரங்களின் லாபம் உயர்வு போன்ற காரணங்களால் சிறு சேமிப்பு வட்டி உயர்த்தப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்நிலையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
சிறு முதலீட்டில் அதிக லாபம் கிடைக்க நினைப்பவர்களுக்கு முதல் தேர்வாக இருப்பது ஃபிக்சட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் தான். சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோர் தபால் அலுவலகம் வாயிலாக கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். மேலும் இதில் பெரிதாக ரிஸ்க் எதுவும் கிடையாது. நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்கும். சொல்லப்பட்ட வட்டி விகிதத்தின் படி வருமானம் கிடைக்கும். மேலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இந்த முறை சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் இருந்தனர். இவ்வகையில், ஜூலை – செப்டம்பர் மாதங்களுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்துடன் ஒன்பது காலாண்டுகளாக சிறு சேமிப்பு வட்டி மாற்றப்படாமலேயே உள்ளது.
தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு – காரணம் என்ன? கோழிப் பண்ணையாளர்கள் தகவல்!
தற்போது சிறு சேமிப்பு திட்டங்களில், பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) 7.10% வட்டி விகிதமும், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS) 7.40% வட்டி விகிதமும், தபால் அலுவலக ஃபிக்சட் டெபாசிடுக்கு 5.5% – 6.7% வட்டி விகிதமும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு (NSC) 6.8%வட்டி விகிதமும், மாத வருமானத் திட்டத்திற்கு (MIS) : 6.6%, கிசான் விகாஸ் பத்திரம் (KVP) 6.9% வட்டி விகிதமும், செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு 7.6% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.