தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு – காரணம் என்ன? கோழிப் பண்ணையாளர்கள் தகவல்!
தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
முட்டை விலை
தமிழகம் முழுவதும் முட்டையின் நுகர்வை அடிப்படையாக கொண்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு மூலமாக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் முட்டை விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி முட்டை கொள்முதல் விலை கடந்த வாரத்தில் 15 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை கொள்முதல் விலை 535 காசுகள் என விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 15 காசுகள் உயர்த்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்தது.
Exams Daily Mobile App Download
அதன்படி முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முட்டை விலை கடந்த 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் 550 காசாக விற்பனை செய்யப்படுவது இதுவே 2வது முறையாக உள்ளது. ஆனால் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டை ரூ.6 அல்லது ரூ.6க்கும் அதிகமாக விற்பனையாகிறது. அதனால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் இது தொடர்பாக பண்ணையாளர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
தமிழக அரசில் தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்கள் – தமிழ் தெரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்…!
இனிவரும் காலங்களில் முட்டை கொள்முதல் விலை ரூ.6 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விலை உயர்வுக்கு கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டி வரியே முக்கிய காரணமாக அமைகிறது. அதனால் இதன் மீது விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.