தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் துவங்கியது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்தது. இந்த நிலையில் கலந்தாய்வு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
கலந்தாய்வு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்களை பொருத்து உரிய படிப்புகளை தேர்வு செய்ய கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். மற்ற கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 18,000க்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
மேலும் இந்தாண்டு மாணவர்கள் வசதிக்காக அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 23 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பபதிவை தொடர்ந்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் குறித்தும் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை அதனால் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கடன் வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம் இதோ!
மாற்றம் செய்யப்பட்ட புதிய அட்டவணை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு கல்லூரிகளில் சேர கூடுதலாக 5 நாட்கள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர 1,64,054 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1,14,918 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மேலும் 87,446 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.