தமிழகத்தில் மார்ச் 20 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் மார்ச் 20 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் மார்ச் 20 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் மார்ச் 20 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி வரை உள்ள வானிலை தகவல் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்16.03.2022 முதல்‌ 18.03.2022 வரை பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌. அடுத்தாக 19.03.2022 தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும் ஓரிரு இடங்களில்‌ லேசான மிதமான மழை என்றும் தெரிவித்து உள்ளனர். அதனை தொடர்ந்து 20.03.2022 என்ற தேதியில் உள்மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌.அடுத்தாக அதிகபட்ச வெப்ப நிலையாக 16.03.2022, 17.03.2022 ஆகிய இரு தினங்களில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ்‌ முதல்‌ 3டிகிரி செல்‌சியஸ்‌ வரை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை (மார்ச்.17) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பறிலை 35 டி௫ரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை என்றும் கூறியுள்ளனர். நேற்று மாலை பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதியில் உருவாகிய காற்றமுத்த தாழ்வு பகுதி இன்று காலை தெற்கு வங்க கடலின்‌ மத்திய பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு வடகிழக்கு திசையில்‌ நகர்ந்து மேலும்‌ வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுஇயில்‌ 19 ஆம்‌ தேது காலை நிலவக்கூடும்‌. இது வடக்கு வடமேற்கு இசையில்‌ அந்தமான்‌ கடலோர பகுத வழியாக நகர்ந்து 20 ஆம்‌ தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. இது மேலும்‌ புயலாக வலுப்பெற்று வங்காளதேசம்‌ மற்றும்‌ வடக்கு மியான்மர்‌ கடலோர பகுதியில் 23 ஆம்‌ தேதி காலை நிலைபெறக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் அனுமதி – ஆட்சியர் அறிவிப்பு!

இது தவிர மீனவர்களுக்கு எச்சரிக்கை தெரிவித்து உள்ளது. அந்த எச்சரிக்கை என்னவென்றால், 16.03.2022 17.03.2022 ஆகிய தேதிகளில் தெற்கு வங்க கடலின்‌ மத்தியப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே மணிக்கு 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌. அதனை தொடர்ந்து 18.03.2022 தெற்கு வங்க கடலின்‌ மத்தியப்பகுதி மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்றும், 19.03.2022 தெற்கு அந்தமான்‌ கடல்பகுதி மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்றும், 20.03.2022 தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஓட்டிய வடக்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 55 முதல்‌ 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே மணிக்கு 75 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பா. செந்தாமரை கண்ணன்‌ தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!