தமிழகத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று ஜூலை 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்தே மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பத்தின் காரணமாக மழை பொழிவு இருந்த வந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி, தற்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை? அரசின் முடிவு!
அதாவது, ஜூலை 6,7,8,9 மற்றும் 10 ம் தேதி ஆகிய ஐந்து நாட்களும் புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களான கோவை, நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 செ மீ மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 13 செ மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளன. இந்த மழையின் காரணமாக இன்று முதல் நாளை மறுநாள் வரை மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மைய ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.